ரூ.700 கோடி மதிப்பில் ‘போனஸ்’  ரூ.700 கோடி மதிப்பில் ‘போனஸ்’ ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
மொத்தம் 12 நிறுவனங்கள் போதும் மற்றவற்றை கை கழுவ அரசு முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2021
03:23

புதுடில்லி : தனியார்மயமாக்கலை விரைவுபடுத்தும் வகையில், மத்திய அரசு, அதன் கீழ் உள்ள, 300 நிறுவனங்களை, 12 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


மத்திய நிதியமைச்சர், தன் பட்ஜெட் உரையில், பொதுத் துறை நிறுவன பங்கு விலக்கல் குறித்து குறிப்பிட்டிருந்தார். அதில், ‘வரி செலுத்துவோரின் பணம் சரியான முறையில் செலவழிக்கப்பட வேண்டும். எனவே, அரசு குறிப்பிட்ட சில பொதுத் துறை நிறுவனங்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்ற நிறுவன பங்குகளை விற்க முடிவெடுத்துள்ளது’ என, தெரிவித்திருந்தார்.அதன் தொடர்ச்சியாக, தற்போது முக்கியமான துறை சார்ந்த நிறுவனங்கள் தவிர்த்து, பிற பெரும்பாலான நிறுவனங்களிலிருந்து அரசு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


இது குறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பட்ஜெட் அறிவிப்புகளை அடுத்து, எந்தெந்த நிறுவனங்களில் பங்கு விலக்கலை மேற்கொள்ளலாம் என்பது குறித்த பட்டியலை தயாரிக்கும் பணியில், ‘நிடி ஆயோக்’ இறங்கி உள்ளது. இதன் பரிந்துரைகள் குறித்து, மத்திய அமைச்சரவை குழு இறுதி முடிவெடுக்கும்.இப்போதைய நிலையில், 300 நிறுவனங்களை 12 ஆக குறைத்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.


அணுசக்தி, விண்வெளி, பாதுகாப்பு, போக்குவரத்து, தொலை தொடர்பு, மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் பிற கனிமங்கள், வங்கி, காப்பீடு மற்றும் நிதி சேவைகள் ஆகிய துறைகளில், அரசுக்குச் சொந்தமாக, குறைந்த அளவிலான நிறுவனங்களே இருக்கும்.மீதி நிறுவனங்கள், தனியார்மயமாக்கப்படும் அல்லது மூடப்படும்.இந்த முறை தனியார்மயமாக்கல் குறித்து, மிகவும் தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக இனி, தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தேவையான முதலீடுகளை மேற்கொண்டு, நிறுவனங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்பதற்கு, அரசுக்கு உதவிகரமாகவும் இருப்பர். கடந்த, 2019ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, மொத்தம், 348 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் நாட்டில் உள்ளன. இவற்றில், 249 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 86 நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 13 நிறுவனங்களை மூடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)