மொத்தம் 12 நிறுவனங்கள் போதும் மற்றவற்றை கை கழுவ அரசு முடிவு மொத்தம் 12 நிறுவனங்கள் போதும் மற்றவற்றை கை கழுவ அரசு முடிவு ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
3 நாடுகளை முந்தியது இந்திய பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2021
03:25

புதுடில்லி : உலகளவில், இந்திய பங்குச் சந்தை, ஏழாவது மிகப் பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது.


மும்பை பங்குச் சந்தையில், ‘மிட்கேப்’ நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 200 லட்சம் கோடி ரூபாயை எட்டியதை அடுத்து, இந்த இடத்தை இந்திய சந்தை பிடித்துள்ளது.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 51 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய நிலையில், சந்தை மதிப்பில், உலகளவில் மூன்று இடங்கள் முன்னேறி, ஏழாவது இடத்துக்கு வந்து உள்ளது.இதையடுத்து, இந்திய பங்குச் சந்தையானது, கனடா, ஜெர்மனி, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் சந்தையை விட, பெரியதாக மாறி உள்ளது.


ஜெர்மனி, எட்டாவது இடத்தில் உள்ளது.மேலும், விரைவில் பிரான்ஸ் சந்தையை பின்னுக்குத் தள்ளி, ஆறாவது இடத்துக்கு முன்னேறிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டின் மொத்த சந்தை மதிப்பு, 209 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.மிகச் சிறப்பாக செயல்படுவதிலும் உலகளவிலான, ‘டாப் 15’ சந்தைகளில், இந்திய பங்குச் சந்தை, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.


அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய சந்தைகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருவது, இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அன்னிய முதலீட்டை பொறுத்தவரை, இரண்டாம் இடத்தில் இருக்கிறது, இந்திய சந்தை.கடந்த ஜனவரி 1ம் தேதி முதல், இதுவரை கிட்டத்தட்ட, 29 ஆயிரத்து, 500 கோடி ரூபாயை, இந்திய சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர், அன்னிய முதலீட்டாளர்கள். பிரேசிலில், 32 ஆயிரத்து, 850 கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளனர்.


இந்தியா, முதலீட்டுக்கு ஏற்ற சந்தையாக இருப்பதாலும், கொரோனா பாதிப்புகளுக்கு பின், தேவைகள் அதிகரித்து, வேகமாக பொருளாதார மீட்சியடைந்து வருவதாலும், பங்குச் சந்தையில் முதலீடுகள் அதிகரிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)