வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ... எகிறும் பெட்ரோல், டீசல் விலை:  தடுமாறும் சரக்கு போக்குவரத்து எகிறும் பெட்ரோல், டீசல் விலை: தடுமாறும் சரக்கு போக்குவரத்து ...
சரிந்தது ‘மோட்டார் பம்ப் செட்’ விற்பனை உரிய விலை கிடைக்காததால் வேதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2021
10:19

கோவை மாவட்டத்தில், 3,000க்கும் மேற்பட்ட சிறு, குறு மோட்டார் பம்ப் செட் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்களை நம்பி, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ‘ஆர்டர்’ எடுத்து தொழில் நடத்தி வருகின்றனர். தொழிற்சாலை, வீடு, விவசாயம் என, பல்வேறு தேவைகளுக்கு மோட்டார் பம்ப் செட்கள் இங்கிருந்து உற்பத்தியாகின்றன.
தமிழகம் மட்டுமின்றி அண்டைய மாநிலங்களான, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களுக்கு கோவையில் இருந்து தான் மோட்டார் பம்ப் செட்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக, மூலப்பொருட்களின் தொடர் விலையேற்றம் இதன் உற்பத்தியை பாதியாக குறைந்து விட்டது.மோட்டார் பம்ப் செட் தொழிலுக்கு முக்கிய மூலதனமான ‘காப்பர்’, ஸ்டீல் ராடு, காந்த அலை தகடுகள் எனும் ‘ஸ்டாம்பிங்’, பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றின் விலை, தற்போது, 20 சதவீதம் கூடியுள்ளதால், தொழில் நடத்த முடியாமல் சிறு, குறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள் திணறுகின்றனர்.தற்போது, ‘ஆர்டர்’, நல்ல ‘மார்க்கெட்’ இருந்தும் மூலப்பொருட்கள் விலையேற்றம் என்பது, குறு, சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தியையும், வாடிக்கையாளர்களிடம் நுகர்வையும் குறைத்து வருகிறது. இதனால், மோட்டார் பம்ப் செட் விற்பனை என்பது, தினமும், 25 சதவீதமாக குறைந்து விட்டதாக உற்பத்தியாளர்கள் புலம்புகின்றனர்.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் மணிராஜ் கூறியதாவது: கோவையில் இருந்து அண்டைய மற்றும் வடமாநிலங்களுக்கு, ‘சீசன்’ சமயத்தில் தினமும், 25 ஆயிரம் மோட்டார் பம்ப் செட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. மூலப்பொருட்கள் விலையேற்றம் உற்பத்தியையும், விற்பனையும் பாதித்து வருகிறது. டீலர்கள் பலர், பழைய விலைக்கு கேட்பதால் தற்போதைக்கு விற்பனை செய்ய முடியவில்லை.தற்போது, கோவையில், 25 சதவீதத்துக்கும் குறைவாக மட்டுமே (6,000 எண்ணிக்கை) விற்பனையும், ஏற்றுமதியும் நடந்து வருகிறது. முதலீடு அதிகம் செய்யும் பெரிய நிறுவனங்களுடன் எங்களால் போட்டியிட முடியாது. இந்நிலையில், மத்திய அரசு மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே, எங்களால் பழைய நிலைக்கு திரும்ப முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)