எகிறும் பெட்ரோல், டீசல் விலை:  தடுமாறும் சரக்கு போக்குவரத்துஎகிறும் பெட்ரோல், டீசல் விலை: தடுமாறும் சரக்கு போக்குவரத்து ... ஓரியண்ட் எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தும் புது ரக எமர்ஜென்ஸி எல்இடி விளக்குகள் ஓரியண்ட் எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தும் புது ரக எமர்ஜென்ஸி எல்இடி ... ...
ரூ.500 கேஷ்பேக் சலுகையுடன் ‘பாஸ்டேக்’ வழங்கும் கோட்டக் மஹிந்திரா வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2021
19:03

இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில, எக்ஸ்பிரஸ் சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல் உங்கள் பயணத்தை சிறப்பானதாகவும் வசதியானதாகவும் எளிதானதாகவும் மாற்றும் வகையில் ‘பாஸ்டேக்’ சேவையை கோட்டக் மஹிந்திரா வங்கி வழங்குகிறது.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய பாஸ்டேக் சேவை மூலம் வாகனங்கள் சுங்கச் சாவடிக்கு செல்லும்போது அங்குள்ள ஸ்கேனர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்ட பாஸ்டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து அதற்கான பணத்தை அவர்களின் வங்கி கணக்கிலிருந்து கழித்துக்கொள்ளும். இதன் காரணமாக பணப்பரிமாற்றம் இல்லாமல் சுங்கச் சாவடிகளை வேகமாக கடக்க முடியும்.

இந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு சலுகை கட்டணத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கி வழங்குகிறது. இந்த வங்கி மூலம் பாஸ்டேக் சேவை பெறும் வாடிக்கையாளர்களுக்கு 500 ரூபாய் கேஷ்பேக் சலுகையை அளிக்கிறது. புதிய பாஸ்டேக் வழங்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் உங்கள் சுங்கச்சாவடி பரிவர்த்தனையின் அடிப்படையில் 500 ரூபாய் கேஷ் பேக் வழங்கப்படும். அது வாடிக்கையாளரின் பாஸ்டேக் வாலட்டில் ஒரு மாத சுங்கச்சாவடி பரிவர்த்தனைக்கு பின் 30 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சலுகையானது அனைத்து பயணிகள் கார்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த சலுகை கோட்டக் என்இடிசி பாஸ்டேக் என்ற இணையதளம் மூலம் இவ்வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களுக்கும் மார்ச் 31-ந்தேதி வரை கிடைக்கிறது. இதை பெறு விரும்புவோர் பல எளியமுறைகளில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். www.kotak.com/fastag என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது உங்கள் அருகில் உள்ள கோட்டக் வங்கி கிளைகளுக்கும் சென்று பெற்றுக் கொள்ளலாம். மேலும் 5676788 என்ற எண்ணுக்கு KTAG என்று எஸ்எம்எஸ் அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம். 1860 266 2666 என்ற எண்ணில் வங்கியின் வாடிக்கையாளர் சேவை பிரிவை தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலாம்.

இது குறித்து கோட்டக் மஹிந்திரா வங்கியின் வாடிக்கையாளர் அனுபவ வழங்கல் மற்றும் தயாரிப்புகள் பிரிவுத் தலைவர் புனித் கபூர் கூறுகையில், பாஸ்டேக் போன்ற பணமில்லா டிஜிட்டல் பரிமாற்றங்கள், விரைவான போக்குவரத்து மற்றும் எரிபொருளில் சேமிப்பு ஆகியவற்றைக் கொண்டு பயணத்தை எளிதாகவும் மன அழுத்தமில்லாமலும் செய்துள்ளது. இப்போது, தடையற்ற பயணத்துடன் கூடுதல் நன்மைகளுடன் கூடிய கோட்டக் என்இடிசி பாஸ்டேக் உங்களின் பயணத்தை சிறப்பானதாக மாற்றுகிறது. உங்களின் எளிதான பயணத்திற்கு கோட்டக் என்இடிசி பாஸ்டேக்கை காட்டிலும் சிறந்தது வேறொன்றும் இல்லை என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)