ஏ.சி மற்றும் எல்.இ.டி., துறைகளுக்கு ரூ.6,238 கோடி – நிதிக் குழு ஒப்புதல்!ஏ.சி மற்றும் எல்.இ.டி., துறைகளுக்கு ரூ.6,238 கோடி – நிதிக் குழு ஒப்புதல்! ... ஆன்லைன் விற்பனை ‘ 36 சதவீதம் அதிகரிப்பு ஆன்லைன் விற்பனை ‘ 36 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘வேண்டுமென்றே பாதுகாப்பு குறைவான கார்களை தயாரிக்கின்றனர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2021
20:55

புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனங்கள், வேண்டுமென்றே பாதுகாப்பு தரம் குறைந்த வாகனங்களை இந்தியாவில் தயாரித்து, விற்பனை செய்வதாகவும்; மன்னிக்க முடியாத இந்த செயலை உடனே நிறுத்துமாறும் மத்திய அரசின் உயரதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த, வாகன பாதுகாப்பு சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக செயலர் கிரிதர் அரமானி இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:இந்தியாவில், வாகன தயாரிப்பாளர்கள், பாதுகாப்பு தரம் குறைந்தவற்றை வேண்டுமென்றே பயன்படுத்தி, இந்திய மாடல் கார்களின் தரத்தை குறைப்பதாக கூறப்படும் செய்திகள் குறித்து நான் கவலைஅடைந்துள்ளேன். இந்தசெயலை நிறுத்த வேண்டும். இது மன்னிக்க முடியாததாகும்.மிகக் குறைவான உற்பத்தியாளர்கள் மட்டுமே, பாதுகாப்பு மதிப்பீட்டு முறையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதுவும் விலையுயர்ந்த மாடல் கார்களுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்துகின்றனர் என்பது மிகவும் வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது.

பல தர பரிசோதனைகளில், இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில், வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களை விட, உள்நாட்டில் விற்கப்படும் கார்களில் பாதுகாப்பு தரம் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)