பதிவு செய்த நாள்
12 பிப்2021
22:15
புதுடில்லி:கடந்த ஜனவரி மாதத்தில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 7.8 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. மேலும், தங்க ஆபரண ஏற்றுமதி ஏப்ரல் முதல், ஜனவரி வரையிலான காலத்தில், 65 சதவீதம் சரிவை கண்டுள்ளது.
இது குறித்து, ‘நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்’ தெரிவித்து உள்ளதாவது:கடந்த ஜனவரி மாதத்தில், இத்துறையின் ஏற்றுமதி, 7.8 சதவீதம் அளவுக்கு சரிந்து, 19 ஆயிரத்து, 710 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், இந்த ஆண்டு ஜனவரி வரையிலான காலத்தில், ஏற்றுமதி, 37 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது.
மேலும், தங்க ஆபரண ஏற்றுமதி, 65 சதவீதமும்,நறுக்கப்பட்டு மெருகூட்டப்பட்ட நவரத்தினங்கள் ஏற்றுமதி, 23.43 சதவீதமும் சரிவடைந்து உள்ளது.திருத்தப்பட்ட, ஜி.எம்.எஸ்., எனும், ‘தங்க பணமாக்கல் திட்டம்’ அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும். ஏனெனில் இது, இந்தியாவில் பயன்படுத்தப்படாத டன் கணக்கான தங்கத்தை வெளியே கொண்டு வர உதவும்.
இத்திட்டம் நுகர்வோர், சில்லரை விற்பனையாளர்மற்றும் வங்கிகளுக்கு மட்டுமல்ல; தேசத்திற்கும் பயனளிக்கும். மேலும், தங்கத்தின் இறக்குமதியை வெகுவாக குறைக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|