பதிவு செய்த நாள்
13 பிப்2021
20:36
புதுடில்லி:உடல்நலம் மற்றும் ஆரோக்கிய பொருட்கள் விற்பனையாளரான, ‘நுரேகா’ நிறுவனம், நாளை, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.
பங்கு வெளியீட்டின்போது, ஒரு பங்கின் விலை, 396 – 400 ரூபாய் என, இந்நிறுவனம் நிர்ணயித்திருப்பதாக அறிவித்துள்ளது.இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம், இந்நிறுவனம், 100 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள், அதன் ஊழியர்களுக்காக ஒதுக்க திட்டமிட்டுள்ளது.
நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பங்கு விலையில், 20 ரூபாய் தள்ளுபடி சலுகையையும் அறிவித்துள்ளது, ‘நுரேகா!’முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம், 35 பங்குகளாகவோ அல்லது அதன் மடங்குகளிலோ வாங்கிக் கொள்ளலாம்.புதிய பங்கு வெளியீடு, நாளை துவங்கி, 17ம் தேதியுடன் முடிவடைகிறது.
பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, நிறுவனத்தின் நடைமுறை மூலதன செலவுகளுக்கும், பொதுவான நிர்வாக தேவைகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப் பட்டு உள்ளது.இந்நிறுவனம் தயாரிப்புகளை, ‘ஆன்லைன்’ வணிக நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் தன், ‘டிஆர்டிரஸ்ட் டாட் இன்’ எனும் வலைதளம் ஆகியவற்றின் மூலமாக விற்பனை செய்து வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|