பதிவு செய்த நாள்
13 பிப்2021
20:37
புதுடில்லி:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், மார்க் லிஸ்டோசெல்லா என்பவரை, தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக நியமித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
மார்க் லிஸ்டோசெல்லா, ‘புசோ டிரக் அண்டு பஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், ‘டெய்ம்லர் டிரக்ஸ்’ நிறுவனத்தின் ஆசிய பிரிவுக்கான தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.இவர், ஜூலை 1ம் தேதி முதல் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.
தற்போதைய தலைமை செயல் அதிகாரியான குந்தர் பட்செக் தன்னுடைய ஒப்பந்தம் முடிவுக்கு வருவதை அடுத்து, ஜெர்மனிக்கு செல்ல இருப்பதாக கூறியதை அடுத்து, புதிய தலைமை செயல் அதிகாரியை, ‘டாடா மோட்டார்ஸ்’தேர்வு செய்துள்ளது.
மார்க் நியமனம் குறித்து, ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் கூறியதாவது:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்துக்கு மார்க்கை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மார்க், வாகன வணிகத்தின் அனுபவம் மிக்க தலைவராக உள்ளார். அவர் வர்த்தக வாகன துறையில் ஆழ்ந்த அறிவும், நிபுணத்துவமும் கொண்டவர். இந்தியாவிலும் நல்ல அனுபவம் கொண்டவர்.இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|