பதிவு செய்த நாள்
13 பிப்2021
20:39
புதுடில்லி:கடந்த 27ம் தேதியன்று, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ ஓர் ஆலோசனையை முன்மொழிந்தது.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், நிர்வாக இயக்குனர் மற்றும் முழுநேர இயக்குனராக, ஒருவர் தேர்வாகாமல் தோல்வியடைந்த நிலையில், அவர் மீண்டும் அப்பதவிக்கு வருவது குறித்து, சில நிபந்தனைகளை செபி வெளியிட்டது. இந்த ஆலோசனையின் நோக்கம், இத்தகைய உயர் பதவிகளுக்கு ஒருவரை நியமிப்பதில், பங்குதாரர்களின் கருத்து உயரிய இடத்தை பெற வேண்டும் என்பதால் தான்.
இதனால், இந்த ஆலோசனை குறித்து, பொதுமக்களின் கருத்தையும் கேட்க விரும்பியது, செபி. கடந்த 12ம் தேதிக்குள், மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், வரும் 26ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
செபி வழங்கியிருக்கும் ஆலோசனையின்படி, ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், முழு நேர இயக்குனர் பதவிகளுக்கு, ஒருவர் நியமிக்கப்படுவதை, பங்குதாரர்கள் மறுத்துவிடும் பட்சத்தில், அவர் மீண்டும் அப்பதவிக்கு வருவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படும்.ஒரு வேளை, அவர் மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை எனில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பெயரை பரிந்துரைக்க முடியாது.இவை போன்ற பல ஆலோசனைகளை செபி முன்வைத்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|