பதிவு செய்த நாள்
13 பிப்2021
20:41
புதுடில்லி:மின்சார இருசக்கர வாகனங்களை தயாரிக்கும், ‘ஏத்தர் எனர்ஜி’ நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 635 கோடி ரூபாயை, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்து உள்ளது.
இந்நிறுவனம், பிரபல, ‘ஹீரோ மோட்டோகார்ப்’ நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலையில், 635 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக, ‘ஏத்தர் எனர்ஜி’ தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், கடந்த ஜனவரி 2ம் தேதியன்று, ஓசூரில் உற்பத்தியை துவங்கியது. கிட்டத்தட்ட, 90 சதவீதம் அளவுக்கு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்களை கொண்டு, தயாரிப்புகளை மேற்கொண்டு வருகிறது.பேட்டரி உட்பட உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை தான் என்பது கூடுதல் சிறப்பு.இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு, 1.1 லட்சம் வாகனங்களையும், 1.2 லட்சம் பேட்டரிகளையும் தயாரிக்கும் திறன் கொண்டதாகும்.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான தருண் மேத்தா கூறியதாவது:வாடிக்கையாளர்கள் தேவை பல மடங்கு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப தயாரிப்புகளையும் விரிவுபடுத்தி வருகிறோம்.இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|