பதிவு செய்த நாள்
16 பிப்2021
06:05
மும்பை, : மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ நேற்று, 52 ஆயிரம் புள்ளிகளை தாண்டி, புதிய சாதனையை படைத்துள்ளது.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’யும் புதிய சாதனை உயரத்தை எட்டியது. இதையடுத்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், நேற்று மட்டும், 1.2 லட்சம் கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளனர்.நேற்று உலக சந்தைகளின் சாதகமான போக்கு மற்றும் நிதி துறை பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது ஆகியவை காரணமாக, சென்செக்ஸ் குறியீட்டு எண், 610 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 52 ஆயிரத்து, 236 புள்ளிகளில் நிலை பெற்றது.இதே போல், நிப்டியும், வர்த்தகத்தின் இறுதியில், 151 புள்ளிகள் அதிகரித்து, 15 ஆயிரத்து, 315 புள்ளிகளில் நிலை பெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், வங்கி துறை பங்குகள் அதிக லாபமீட்டின. குறிப்பாக, ஆக்சிஸ் வங்கி பங்குகள், அதிகபட்சமாக, 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன. ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் மீட்சி கண்டதை அடுத்து, டோக்கியோ சந்தையின் குறியீட்டு எண், ‘நிக்கி 225’ முப்பது ஆண்டுகளில் இல்லாத வகையில், முதன் முறையாக, 30 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.இது, இந்திய சந்தையின் ஏற்றத்துக்கும் துணை புரிவதாக அமைந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|