பதிவு செய்த நாள்
16 பிப்2021
21:36
புதுடில்லி:இந்தியாவில் விற்பனை ஆகும் பயணியர் வாகனங்களில், இரண்டில் ஒரு வாகனம், ‘மாருதி சுசூகி’ நிறுவனத்தின் தயாரிப்பாக இருக்கிறது. தொடர்ந்து, நான்காவது ஆண்டாக, இந்நிறுவனம் இந்த சாதனையை புரிந்து வருகிறது.
இந்திய சந்தையை பொறுத்தவரை, சிறிய கார்கள் பிரிவில் மாருதியின் பங்கு, 67 சதவீதமாக இருக்கிறது. இதேபோல், செடான் ரக கார்களில், 50 சதவீதமும்; எஸ்.யு.வி., ரக கார்களில் 14 சதவீதமும்; பன்முக பயன்பாட்டு வாகனங்கள் பிரிவில், 55 சதவீதமும்; வேன்களில், 98 சதவீதமும் பங்களிப்பை கொண்டிருக்கிறது, மாருதி.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷஷாங் ஸ்ரீவத்ஸவா கூறியதாவது:தொடர்ந்து, நான்காவது ஆண்டாக, பயணியர் வாகனங்களை வாங்குபவர்களில் பாதிப் பேர்களின் தேர்வு, மாருதி சுசூகியாக இருக்கிறது.மற்ற பிரிவுகளில் அதிகமான பங்களிப்பு இருப்பினும், எஸ்.யு.வி., பிரிவில், எதிர்பார்ப்புக்கு கீழேதான் இருக்கிறது.
காம்பாக்ட் எஸ்.யு.வி., பிரிவில், மாருதிதான் முதன் முதலில், ‘விட்டாரா பிரெஸ்ஸா’வை அறிமுகம் செய்தது. இன்னும், ‘எஸ் கிராஸ்’ உள்ளிட்ட வாகனங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|