பதிவு செய்த நாள்
17 பிப்2021
21:27
புதுடில்லி:வெளிநாடு வாழ் இந்தியர்கள், கடந்த ஆண்டில், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தான் அதிக ஆர்வம் காட்டியிருப்பதாக, ‘குயிக்கர்’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மிக அதிகளவிலான தேடல் அல்லது தேவை, அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடமிருந்து வந்திருக்கிறது என்றும், இதற்கு அடுத்த இடத்தில், ஐக்கிய அரபு நாடுகளும், பிரிட்டனும் இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.ரியல் எஸ்டேட் குறித்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் தேடலில், 75 சதவீதம், தென்மாநிலங்கள் குறித்தே இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதில் கர்நாடக மாநிலம் முதல் இடத்திலும், தமிழ்நாடு, கேரளா,தெலுங்கானா ஆகியவை முறையே, இரண்டு, மூன்று நான்காவது இடத்தில் இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கும் நிலையிலும், அம்மாநிலத்தில் சொத்து வாங்குவது குறித்த விசாரணைகள் மிக சொற்பமாக இருக்கிறது.
விலையைப் பொறுத்தவரை, ஹைதராபாத், டெல்லி, சென்னை ஆகிய இடங்களில், அதிக சரிவு காணப்பட்டுள்ளது.வெளிநாடு வாழ் இந்தியர்களின் தேடலில், 29 சதவீதம் பேர் குடியிருப்பு மனையை வாங்குவதிலும்; 45 சதவீதம் பேர் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குவதிலும் ஆர்வம் காட்டி இருக்கிறார்கள்.அடுக்குமாடி குடியிருப்பை விரும்புவோரில், வேலை துவங்கி இருக்கும் வீடுகளை விட, கட்டி முடித்த உடன் குடிவர தகுந்த நிலையிலான வீடுகளை விரும்புவர்கள் எண்ணிக்கை, 82 சதவீதமாக இருப்பதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|