பதிவு செய்த நாள்
17 பிப்2021
21:32
மும்பை:மும்பையை சேர்ந்த, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான, ‘லோதா டெவலப்பர்ஸ்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்திருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான, ‘லோதா டெவலப்பர்ஸ்’ இப்போது, ‘மேக்ரோடெக் டெவலப்பர்ஸ்’ என, பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 2,500 – 2,700 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இது, இந்த நிறுவனத்தின் மூன்றாவது முயற்சியாகும். இதற்கு முன், 2009 செப்டம்பரில், 2,800 கோடி ரூபாய் திரட்டும் வகையில் பங்கு வெளியீட்டுக்கு வர முயற்சித்தது. ஆனால், உலக பொருளாதார மந்தநிலை காரணமாக, அம்முயற்சி அரங்கேறவில்லை. அதன்பின், 2018ல் ஒரு முறை முயற்சி எடுத்தது. அப்போது, இந்திய பங்குச் சந்தை நிலவரங்கள் சரியில்லாததால், பின்வாங்கி விட்டது.தற்போது பங்குச் சந்தை சூழல் மிகவும் சாதகமாக இருக்கும் காரணத்தால், மீண்டும் முயற்சியில் இறங்கி உள்ளது.கொரோனாவுக்கு பின் வீடுகளுக்கான தேவையும் அதிகரித்து வருவதை ஒட்டி, புதிய பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை, ‘செபி’யிடம் கோரியுள்ளது, இந்நிறுவனம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|