பதிவு செய்த நாள்
17 பிப்2021
21:35
புதுடில்லி:‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம், இந்தியாவிடமிருந்து, 10 ஆயிரத்து, 220 கோடி ரூபாயை பெறுவதற்காக, அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள நீதிமன்றங்களை அணுகி இருக்கிறது.
அடுத்து, கனடா நாட்டின் நீதிமன்றத்தையும் அணுக இருப்பதாக தெரிய வந்துள்ளது.கடந்த, 2007ம் ஆண்டில், பிரிட்டனை சேர்ந்த, ‘கெய்ர்ன்’ நிறுவனம், தன்னுடைய பங்குகளை, இந்தியாவில் இருக்கும், ‘கெய்ர்ன்’ நிறுவனத்துக்கு மாற்றியது. இதையடுத்து, ‘கெய்ர்ன் இந்தியா’ நிறுவனத்துக்கு, 10 ஆயிரத்து, 247 கோடி ரூபாய் வரியை விதித்தது, வருமான வரித் துறை.
இது தொடர்பான வழக்கில், சர்வதேச தீர்ப்பாயம், இந்திய அரசு, 10 ஆயிரத்து, 220 கோடி ரூபாயை, உடனடியாக, ‘கெய்ர்ன்’ நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இந்த தொகையை பெறும் வகையில், தேவைப்பட்டால், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் சொத்துக்களை ஜப்தி செய்யும் முயற்சியில் கூட இறங்க இருப்பதாக, ‘கெய்ர்ன்’ தெரிவித்திருந்தது.மேல்முறையீட்டுக்கு, மார்ச் 21ம் தேதி வரை அவகாசம் இருப்பதால், இந்தியா இது குறித்து இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், ‘கெய்ர்ன்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைமன் தாம்சன், இன்று நிதித்துறை செயலர் அஜய் பூஷன் பாண்டேவை சந்திக்க இருக்கிறார். அடுத்து நிதியமைச்சரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|