பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்த எலான் மஸ்க் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்த எலான் மஸ்க் ...  காப்பீட்டு துறை தனியார்மயமாக்கல் காப்பீட்டு துறை தனியார்மயமாக்கல் ...
இந்தியாவுக்கு எதிராக ‘கெய்ர்ன்’ உலகம் முழுவதும் வழக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2021
21:35

புதுடில்லி:‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம், இந்தியாவிடமிருந்து, 10 ஆயிரத்து, 220 கோடி ரூபாயை பெறுவதற்காக, அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள நீதிமன்றங்களை அணுகி இருக்கிறது.

அடுத்து, கனடா நாட்டின் நீதிமன்றத்தையும் அணுக இருப்பதாக தெரிய வந்துள்ளது.கடந்த, 2007ம் ஆண்டில், பிரிட்டனை சேர்ந்த, ‘கெய்ர்ன்’ நிறுவனம், தன்னுடைய பங்குகளை, இந்தியாவில் இருக்கும், ‘கெய்ர்ன்’ நிறுவனத்துக்கு மாற்றியது. இதையடுத்து, ‘கெய்ர்ன் இந்தியா’ நிறுவனத்துக்கு, 10 ஆயிரத்து, 247 கோடி ரூபாய் வரியை விதித்தது, வருமான வரித் துறை.

இது தொடர்பான வழக்கில், சர்வதேச தீர்ப்பாயம், இந்திய அரசு, 10 ஆயிரத்து, 220 கோடி ரூபாயை, உடனடியாக, ‘கெய்ர்ன்’ நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இந்த தொகையை பெறும் வகையில், தேவைப்பட்டால், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் சொத்துக்களை ஜப்தி செய்யும் முயற்சியில் கூட இறங்க இருப்பதாக, ‘கெய்ர்ன்’ தெரிவித்திருந்தது.மேல்முறையீட்டுக்கு, மார்ச் 21ம் தேதி வரை அவகாசம் இருப்பதால், இந்தியா இது குறித்து இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், ‘கெய்ர்ன்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைமன் தாம்சன், இன்று நிதித்துறை செயலர் அஜய் பூஷன் பாண்டேவை சந்திக்க இருக்கிறார். அடுத்து நிதியமைச்சரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)