பதிவு செய்த நாள்
18 பிப்2021
21:10
புதுடில்லி:சரக்கு போக்குவரத்து துறையை சேர்ந்த, ‘செவன் ஐலண்ட்ஸ் ஷிப்பிங்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்துஉள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 600 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், 400 கோடி ரூபாய்க்கு, புதிய பங்குகளையும்; 200 கோடி ரூபாய்க்கு, நிறுவனர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.இவற்றில், 50 சதவீத பங்குகள், தகுதி வாய்ந்த முதலீட்டு நிறுவனங்களுக்கும், 15 சதவீத பங்குகள், நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்களுக்கும், 35 சதவீத பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு முன், 2017ம் ஆண்டில் ஒரு முறை, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டது. ஆனால், அப்போதைய சந்தை சூழ்நிலை காரணமாக பங்கு வெளியீட்டுக்கு வரவில்லை.இந்நிறுவனம், 2003ம் ஆண்டில் துவக்கப்பட்டது. இதுவரை இந்த நிறுவனம், 40 கப்பல்களை வாங்கி இருக்கிறது. 20 கப்பல்களை விற்றிருக்கிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|