பதிவு செய்த நாள்
18 பிப்2021
21:12
புதுடில்லி:மத்திய அரசு, சென்னையை தலைமைஇடமாக கொண்ட, ‘யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ ஆகிய இரு நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் முயற்சியை தீவிரப்படுத்தி இருக்கிறது.
முடிவு
யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்குவது குறித்து, ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போது, மறு காப்பீட்டு நிறுவனமான, ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தை தனியார்மயமாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியது:ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தை, தனியார்மயமாக்குவது குறித்து முடிவெடுக்கும் முன், அரசு, மறுகாப்பீட்டு வணிகத்திலிருந்து வெளியேறுவது குறித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அது சம்பந்தமாக, ‘நிடி ஆயோக்’ உடன் அரசு ஆலோசனை மேற்கொள்ளும்.ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், 85.78 சதவீத பங்குகள் மத்திய அரசிடம் உள்ளன. இந்நிறுவனம், 2017 அக்டோபரில், சந்தையில் பட்டியலிடப்பட்டது.\
பொது காப்பீட்டு துறையில், ‘யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ், நேஷனல் இன்ஷூரன்ஸ், நியு இந்தியா அஷ்யுரன்ஸ், ஓரியன்டல் இன்ஷூரன்ஸ்’ என, நான்கு நிறுவனங்கள் உள்ளன.
எதிர்பார்ப்பு
இந்த நான்கு பொது காப்பீட்டு நிறுவனங்களில், மத்திய அரசு, லாபகரமாக இயங்கி வரும், ‘நியு இந்தியா அஷ்யூரன்ஸ்’ நிறுவனத்தை மட்டும் கையில் வைத்துக் கொள்ளும் என, எதிர் பார்க்கலாம். இந்நிறுவனத்தில் மத்திய அரசின் வசம், 85.44 சதவீத பங்குகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|