இந்தியாவுக்கு எதிராக ‘கெய்ர்ன்’ உலகம் முழுவதும் வழக்கு இந்தியாவுக்கு எதிராக ‘கெய்ர்ன்’ உலகம் முழுவதும் வழக்கு ...  ‘இனி இன்வெர்ட்டர் தேவை குறைந்துவிடும்’ ‘இனி இன்வெர்ட்டர் தேவை குறைந்துவிடும்’ ...
காப்பீட்டு துறை தனியார்மயமாக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2021
21:12

புதுடில்லி:மத்திய அரசு, சென்னையை தலைமைஇடமாக கொண்ட, ‘யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ ஆகிய இரு நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் முயற்சியை தீவிரப்படுத்தி இருக்கிறது.

முடிவு

யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்குவது குறித்து, ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போது, மறு காப்பீட்டு நிறுவனமான, ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தை தனியார்மயமாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியது:ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தை, தனியார்மயமாக்குவது குறித்து முடிவெடுக்கும் முன், அரசு, மறுகாப்பீட்டு வணிகத்திலிருந்து வெளியேறுவது குறித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அது சம்பந்தமாக, ‘நிடி ஆயோக்’ உடன் அரசு ஆலோசனை மேற்கொள்ளும்.ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், 85.78 சதவீத பங்குகள் மத்திய அரசிடம் உள்ளன. இந்நிறுவனம், 2017 அக்டோபரில், சந்தையில் பட்டியலிடப்பட்டது.\

பொது காப்பீட்டு துறையில், ‘யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ், நேஷனல் இன்ஷூரன்ஸ், நியு இந்தியா அஷ்யுரன்ஸ், ஓரியன்டல் இன்ஷூரன்ஸ்’ என, நான்கு நிறுவனங்கள் உள்ளன.

எதிர்பார்ப்பு

இந்த நான்கு பொது காப்பீட்டு நிறுவனங்களில், மத்திய அரசு, லாபகரமாக இயங்கி வரும், ‘நியு இந்தியா அஷ்யூரன்ஸ்’ நிறுவனத்தை மட்டும் கையில் வைத்துக் கொள்ளும் என, எதிர் பார்க்கலாம். இந்நிறுவனத்தில் மத்திய அரசின் வசம், 85.44 சதவீத பங்குகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)