பதிவு செய்த நாள்
18 பிப்2021
21:16
திருப்பூர்:நடப்பு நிதியாண்டின் முதல், 10 மாதங்களில், இந்திய பின்னலாடை ஏற்றுமதி மதிப்பு, 37 ஆயிரத்து, 915 கோடி ரூபாயை எட்டியுள்ளது. திருப்பூரில் இருந்து மட்டும், 19 ஆயிரத்து, 630 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதியாகி உள்ளன.
பல்வேறு நாடுகள்
திருப்பூர், லுாதியானா, மும்பை, டில்லி, பெங்களூரு ஆகியவை, நாட்டின் பின்னலாடை உற்பத்தி மையங்களாக உள்ளன. ஐரோப்பா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கு, இங்கிருந்து பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.கடந்த, 2018 – 19ம் நிதியாண்டில், 54 ஆயிரத்து, 692 கோடி ரூபாயை எட்டிய நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி, 2019 – 20ம் நிதியாண்டில், 53 ஆயிரத்து, 199 கோடி ரூபாயாக குறைந்தது.
அதிகரிப்பு
கொரோனாவால், கடந்த ஆண்டு, ஏப்., முதல் ஆக., வரை, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், ‘‘நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 12 சதவீத அளவுக்கு சரியும் நிலையில் உள்ளது. ஏற்றுமதி, 47 ஆயிரம் கோடி ரூபாயை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது.
‘‘திருப்பூர், 24 ஆயிரம் கோடி ரூபாயை எட்டலாம். வெளிநாடுகளில் இருந்து, ‘ஆர்டர்’ அதிகரித்துள்ளது. ‘‘அடுத்த நிதியாண்டில், ஏற்றுமதி முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நம்புகிறோம்,’’ என்றனர்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|