காப்பீட்டு துறை தனியார்மயமாக்கல் காப்பீட்டு துறை தனியார்மயமாக்கல் ... டியூலக்ஸ் அஷ்யூரன்ஸ் பினிஷ் திட்டம் அறிமுகம் டியூலக்ஸ் அஷ்யூரன்ஸ் பினிஷ் திட்டம் அறிமுகம் ...
‘இனி இன்வெர்ட்டர் தேவை குறைந்துவிடும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2021
21:22

தொழில்நுட்பத்தில் புதுப்புது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன் தாக்கம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்களிலும் பிரதிபலிப்பதை பார்க்க முடிகிறது.

உதாரணமாக, மின்சார பல்புகளை எடுத்துக்கொண்டால் துவக்கத்தில், குண்டு பல்புகளாக இருந்தன, அதன்பின், டியூப் லைட், எல்.இ.டி., என மாற்றம் கண்டு, தற்போது, எமர்ஜென்சி எல்.இ.டி., என்ற கட்டத்துக்கு வந்திருக்கிறது.‘சி.கே பிர்லா’ குழுமத்தைச் சேர்ந்த, ‘ஓரியன்ட் எலெக்ட்ரிக்’ நிறுவனம், அண்மையில் எமர்ஜென்சி எல்.இ.டி., பல்புகளை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் புனித் தவான் உடனான உரையாடலில் இருந்து...

இந்த புதிய வகை எல்.இ.டி., பல்பின் சிறப்புஅம்சம் என்ன?

மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், தொடர்ந்து எரியும் என்பதுதான் இதன் சிறப்பு. இந்த பல்பில் பேட்டரி மற்றும் சார்ஜர் உள்ளது. அதிகபட்சம், நான்கு மணிநேரம் வரை இந்த பல்பை, மின்சாரம் இன்றி பயன்படுத்த முடியும். மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், ஒரு நொடிகூட நம்மால் இருட்டைப் பார்க்க முடியாது. அவ்வளவு விரைவாக இந்த பல்பு செயல்படும். தற்போது நாம் பயன்படுத்தும் அனைத்து ஹோல்டர்களிலும் இந்த பல்பை பொருத்த முடியும். மின்சாரம் மீண்டும் வந்ததும், பல்பு தானாகவே சார்ஜ் ஏற்றிக் கொள்ளும்.\

மின்சார தடை வெகுவாக குறைந்து வரும் நிலையில், இந்த பல்புக்கான தேவை இருக்குமா?

மின் தடை பிரச்னை தற்போது பெருமளவுக்கு குறைந்திருக்கிறது என்பது உண்மைதான். இருந்தாலும், அரை மணி அல்லது, ஒரு மணிநேரம் வரை அவ்வப்போது மின்தடை இருந்து கொண்டுதான் இருக்கிறது. கொஞ்சம் வசதியான வீடுகளில், ‘இன்வெர்ட்டர்’களை பயன்படுத்தி சமாளித்துக் கொள்கிறார்கள். சாதாரணமானவர்களுக்கு? ‘இன்வெர்ட்டர்’ வாங்க கிட்டத்தட்ட, 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்வதற்கு பதிலாக, இத்தகைய பல்பை வாங்கி, மின் தடையை எளிதாக சமாளிக்கலாம். இனி ‘இன்வெர்ட்டர்’ தேவை குறைந்துவிடும்.

இதன் விலை என்ன?

சாதாரண, எல்.இ.டி., பல்பை விட, 50 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை இவற்றின் விலை அதிகமாக இருக்கும். ஆனால், இந்த பல்புகளை மற்ற பல்புகளுடன் ஒப்பிடக் கூடாது. ‘இன்வெர்ட்டர்’ வாங்குவதுடன் ஒப்பீடு செய்வதே சரியாக இருக்கும். இந்த பல்புகளை தாராளமாக, 3 முதல், 5 ஆண்டுகள் வரை கூட பயன்படுத்த முடியும்.

உங்களின் உற்பத்தி, மற்றும் சந்தை அளவு குறித்து கூற முடியுமா?

எங்களிடம் உள்ள இரு உற்பத்தி ஆலைகள் மூலம் நாள் ஒன்றுக்கு, ஒரு லட்சம் பல்புகளை தயார் செய்கிறோம். எங்களது மொத்த உற்பத்தியில், பத்து சதவீதம் அளவுக்கு எமர்ஜென்ஸி எல்.இ.டி.,கள் இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டு வருகிறோம்.இந்த துறையில் எங்களது குழுமம், 10 ஆண்டுகளுக்கு முன்பு களம் இறங்கியது. இந்த பிரிவில் பெரிய பிராண்டுகள் இருந்தாலும், நாங்கள் இரட்டை இலக்க சந்தையை வைத்து இருக்கிறோம். இந்த துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் மற்றும் சந்தையின் சராசரி வளர்ச்சியை விட, நாங்கள் வேகமாக வளர்கிறோம்.

பிற துறைகளைப் போல, ‘பி.எல்.ஐ.,’ எனும், ‘உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கச் சலுகை திட்டம்’ எல்.இ.டி., துறைக்கு எப்போது வரும் என எதிர்பார்க்கிறீர்கள்?

உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தி, இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். எங்கள் துறையிலும் கருத்துகளை அரசு கேட்டிருக்கிறது. வரும் ஏப்ரலில் இது குறித்து அரசின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)