டியூலக்ஸ் அஷ்யூரன்ஸ் பினிஷ் திட்டம் அறிமுகம்டியூலக்ஸ் அஷ்யூரன்ஸ் பினிஷ் திட்டம் அறிமுகம் ...  டிசம்பரிலும் ‘ஏர்டெல்’ முன்னிலை டிசம்பரிலும் ‘ஏர்டெல்’ முன்னிலை ...
கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்த எச்.சி.எல். பவுண்டேஷன் ரூ.16.5 கோடி உதவித்தொகை வழங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2021
19:56

எச்.சி.எல் பவுண்டேஷனின் மீச்சிறப்பு திட்டமான எச்.சி.எல் கிராண்ட், தனது ஆறாவது பதிப்பின் வெற்றியாளர்களை அறிவித்தது. சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய மூன்று வளர்ச்சித் துறைகளில் மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தலா 5 கோடி ரூபாய் (685,000 டாலர்கள்) உதவித் தொகையை மூன்று முதல் ஐந்து ஆண்டு காலத் திட்டங்களுக்கு மானியமாகப் பெறுவர். கூடுதலாக, ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு இறுதிப் போட்டியாளர்களுக்கு ஒரு வருட மானியமாக 25 லட்சம் (34,000 டாலர்கள்) கிடைக்கும், மொத்த மானியத் தொகை இந்திய ரூபாய் மதிப்பில் 16.5 கோடியாக இருக்கும்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு அறக்கட்டளைகளான தானம் அறக்கட்டளை (மதுரை) சுற்றுச்சூழல் பிரிவிலும், கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் (வேலூர்) கல்வி பிரிவிலும் இறுதிப் போட்டியாளர்களாக பங்கேற்று 25 லட்சம் மானியம் பெற்றது. ஒரு சிறந்த நடுவர் மன்றம், ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை 8 மாதகாலம் மதிப்பாய்வு செய்த பின்னர், எச்.சி.எல் கிராண்டின் நிர்வாக பங்காளியான கிராண்ட் தோர்ன்டன் அவர்கள் கண்காணிப்பு மற்றும் தணிக்கை செய்த பிறகு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதுபற்றி “எச்.சி.எல் பவுண்டேஷன் இயக்குநர் நிதி புந்திர் கூறுகையில், “2020 ஆம் ஆண்டு சிறப்புமிக்கது மற்றும் அசாதாரணமானது, இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களைப் கோவிட்-19 பெரும் தொற்றை ‘புதிய இயல்பு’ என்று கருதினர், மேலும் இடைநிறுத்தமின்றி தங்கள் புதிய திட்டங்களைத் தொடர்ந்தனர். இது மிகவும் தேவைப்படும் கடைசி மைல் ஆதரவு கட்டமைப்பை உருவாக்கியது” என்றார்.

இந்தியாவின் 18 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் 70 மாவட்டங்களில் 8,598 கிராமங்களில் குறைந்தது 1.72 மில்லியன் மக்களின் வாழ்க்கைக்கு பங்களிப்பவதை தனது நோக்கமாகக் எச்.சி.எல் கிராண்ட் கொண்டுள்ளது. எச்.சி.எல் கிராண்ட் விருதுகள் அளிக்கப்பட்ட போது போது, எச்.சி.எல் பவுண்டேஷனின் “ஐந்தாவது எஸ்டேட் - சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கல்வியில் கிராமப்புற இந்தியாவை நிலைமாற்றும் செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்” என்ற சுருக்கத் தொகுப்பை வெளியிட்டது, இதில் துணை நடுவர் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 30 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முந்தைய ஆண்டு வெற்றி பெற்றவார்களும் இடம் பெற்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)