பதிவு செய்த நாள்
19 பிப்2021
20:48
புதுடில்லி:தொடர்ந்து ஐந்தாவது மாதமாக, கடந்த டிசம்பரிலும், ‘ஏர்டெல்’ நிறுவனம், ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனத்தை விட, அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறது.
அதேசமயம், மொத்த தொலைதொடர்பு துறையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 117.30 கோடியாக குறைந்து உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு நவம்பரில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 117.52 கோடியாக இருந்தது.மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை பொறுத்தவரை, நவம்பரில், 115.52 கோடியாக இருந்தது, டிசம்பரில், 115.38 கோடியாக குறைந்துவிட்டது.
மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததற்கு, ‘வோடபோன் ஐடியா’ 56.90 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்தது முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், கடந்த டிசம்பரில், பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே புதிய வாடிக்கையாளர்களை அதிகம் பெற்றுள்ளன.‘பிராட்பேண்டு’ பிரிவில், ரிலையன்ஸ் ஜியோ முன்னிலை வகிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|