டிசம்பரிலும் ‘ஏர்டெல்’ முன்னிலை டிசம்பரிலும் ‘ஏர்டெல்’ முன்னிலை ...  அமேசானை தடை செய்யணும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை அமேசானை தடை செய்யணும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை ...
‘கெய்ர்ன்’ நிறுவன விவகாரம் மேல்முறையீடு செய்கிறது இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2021
20:50

புதுடில்லி:இந்தியாவுக்கு எதிரான, வரி குறித்த வழக்கில், ‘கெய்ர்ன்’ நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு, சர்வதேச தீர்ப்பாயத்தில் வழங்கப்பட்டது. தற்போது, இதை எதிர்த்து, மத்திய அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது.

வருமான வரி துறை, கெய்ர்ன் நிறுவனத்துக்கு எதிராக, 10 ஆயிரத்து, 247 கோடி ரூபாய் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதை அடுத்து, அந்நிறுவனம், சர்வதேச தீர்ப்பாயத்தை அணுகியது. சர்வதேச தீர்ப்பாயம், ‘பிரிட்டன் – இந்தியா இரு தரப்பு முதலீட்டு ஒப்பந்தம் 2014’ன் படி இந்தியா நடந்துகொள்ளவில்லை என கூறி, தீர்ப்பு வழங்கியது.

மேலும் இந்தியா,1.4 மில்லியன் டாலர், அதாவது, 10 ஆயிரத்து, 220 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.இதையடுத்து, பணத்தை உடனே தருமாறு, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்த கெய்ர்ன், தாமதமாகும்பட்சத்தில், வெளிநாடுகளில் உள்ள இந்திய அரசின் சொத்துக்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் இறங்க நேரிடும் என்றும் தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, தீர்ப்பாயத்தின் உத்தரவை, இந்தியா உடனே நிறைவேற்ற வேண்டும் என கோரி, அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள நீதிமன்றங்களை அணுகி இருக்கிறது. அடுத்து, கனடா நாட்டின் நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து பேசுவதற்காக, கெய்ர்ன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைமன் தாம்சன், இந்தியா வந்திருக்கிறார். இவர், கடந்த வியாழன்று, நிதித் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டேவையும் சந்தித்துள்ளார்.இந்நிலையில், சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து, இந்திய அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)