பதிவு செய்த நாள்
19 பிப்2021
20:50
புதுடில்லி:இந்தியாவுக்கு எதிரான, வரி குறித்த வழக்கில், ‘கெய்ர்ன்’ நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு, சர்வதேச தீர்ப்பாயத்தில் வழங்கப்பட்டது. தற்போது, இதை எதிர்த்து, மத்திய அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது.
வருமான வரி துறை, கெய்ர்ன் நிறுவனத்துக்கு எதிராக, 10 ஆயிரத்து, 247 கோடி ரூபாய் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதை அடுத்து, அந்நிறுவனம், சர்வதேச தீர்ப்பாயத்தை அணுகியது. சர்வதேச தீர்ப்பாயம், ‘பிரிட்டன் – இந்தியா இரு தரப்பு முதலீட்டு ஒப்பந்தம் 2014’ன் படி இந்தியா நடந்துகொள்ளவில்லை என கூறி, தீர்ப்பு வழங்கியது.
மேலும் இந்தியா,1.4 மில்லியன் டாலர், அதாவது, 10 ஆயிரத்து, 220 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.இதையடுத்து, பணத்தை உடனே தருமாறு, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்த கெய்ர்ன், தாமதமாகும்பட்சத்தில், வெளிநாடுகளில் உள்ள இந்திய அரசின் சொத்துக்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் இறங்க நேரிடும் என்றும் தெரிவித்தது.
அதுமட்டுமின்றி, தீர்ப்பாயத்தின் உத்தரவை, இந்தியா உடனே நிறைவேற்ற வேண்டும் என கோரி, அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள நீதிமன்றங்களை அணுகி இருக்கிறது. அடுத்து, கனடா நாட்டின் நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து பேசுவதற்காக, கெய்ர்ன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைமன் தாம்சன், இந்தியா வந்திருக்கிறார். இவர், கடந்த வியாழன்று, நிதித் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டேவையும் சந்தித்துள்ளார்.இந்நிலையில், சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து, இந்திய அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|