பதிவு செய்த நாள்
19 பிப்2021
20:52
மும்பை:அன்னிய முதலீட்டாளர்கள், 2014 – -15ம் நிதியாண்டுக்கு பின், நடப்பு நிதியாண்டில் தான், அதிக முதலீட்டை மேற்கொண்டிருக்கின்றனர்.இது குறித்து, தர நிர்ணய நிறுவனமான, ‘கேர் ரேட்டிங்ஸ்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில், அன்னிய முதலீட்டாளர்கள், நடப்பு நிதியாண்டில், கடந்த 15ம் தேதி வரையி லான காலத்தில், 2.47 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கின்றனர். இதையடுத்து, அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு, 43.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதில் பங்குகளில், 39.23 லட்சம் கோடி ரூபாயும்; கடன் திட்டங்களில், 3.75 லட்சம் கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. துறைகளை பொறுத்தவரை, நிதிச் சேவை துறையில் அதிக முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து, மென்பொருள், எண்ணெய் மற்றும் எரிவாயு, வாகனங்கள் மற்றும் பாகங்கள், மருந்துகள் ஆகிய துறைகளில் அதிகம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
நாடுகளை பொறுத்தவரை, அமெரிக்காவில் இருந்து அதிக முதலீடுகள், குறிப்பாக பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|