பதிவு செய்த நாள்
19 பிப்2021
20:57
புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான, அமேசானுக்கு தடை விதித்து, அதன் செயல்பாடுகளை உடனே நிறுத்த வேண்டும் என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, சி.ஏ.ஐ.டி., மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இக்கூட்டமைப்பின் பொதுச் செயலர், பிரவீன் கந்தெல்வால் கூறியதாவது:‘அமேசான்’ நிறுவனம், அன்னிய நேரடி முதலீட்டின் ஓட்டைகளை பயன்படுத்தி, விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது. மேலும், பொருட்களுக்கு அதிக அளவிலான தள்ளுபடிகள், கொள்ளையடிக்கும் வகையிலான விலை நிர்ணயம், சரக்கு கட்டுப்பாடு ஆகியவற்றிலும் தவறாக நடந்து வருகிறது.
அமேசான் மற்றும் ‘பிளிப்கார்ட்’ நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து, அரசு விசாரணை நடத்த வேண்டும்.அண்மையில், நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில், 150 வர்த்தக சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, இந்த ‘ஆன்லைன்’ நிறுவனங்களுக்கு எதிராக, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், பிளிப்கார்ட், அமேசான் நிறுவன தரப்பிலிருந்து, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|