பதிவு செய்த நாள்
19 பிப்2021
21:02
மும்பை:எல்.ஐ.சி., ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம், 1,331 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை, அதன் செயலி வாயிலாகவே வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஓராண்டில் மட்டும், நிறுவனம், அதன் மொபைல் பேங்கிங் செயலியின் வாயிலாக, கிட்டத்தட்ட, 1,331 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை வழங்கி இருக்கிறது.கடந்த ஆண்டு, பிப்ரவரி, 14ம் தேதியன்று, நிறுவனம், 'ஹோமி' எனும் மொபைல் செயலியை, வாடிக்கையாளர்கள் வசதிக்காக அறிமுகம் செய்தது.
இந்த செயலி வாயிலாக, 14 ஆயிரத்து, 155 வாடிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் பெறப் பட்டன. இவற்றில்,7,300க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் வீட்டு கடன் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவற்றில், 6,884 வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டு விட்டது. வாடிக்கையாளர்களின் இவ்வளவு பெரிய ஆதரவால், நாங்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளோம். இதையடுத்து, வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|