பதிவு செய்த நாள்
20 பிப்2021
21:55
திருப்பூர்:பஞ்சு விலை உயர்வு ஒருபுறம்; தரம் குறைவது மறுபுறம் என, தமிழக நுாற்பாலைகள் தவிக்கின்றன.
தமிழக நுாற்பாலைகள், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்து, மூலப்பொருளான பஞ்சை கொள்முதல் செய்கின்றன. 356 கிலோ எடை கொண்ட, ஒரு ‘கேண்டி’ பஞ்சின் கொள்முதல் விலை, கடந்த மாதம், 44 ஆயிரத்து, 500 ரூபாயாக இருந்தது. தற்போது, 46 ஆயிரத்து, 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேசன் கன்வீனர் பிரபுதாமோதரன் கூறியதாவது: ஜவுளி உற்பத்தி சார்ந்த, அனைத்து மூலப்பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது.
போக்குவரத்து செலவுகளுடன் சேர்த்து, பஞ்சு, நுாற்பாலைகளை வந்தடையும்போது, மிகவும் அதிகரித்து விடுகிறது.சீசன் துவங்கிய நவம்பர் மாதம் பெய்த மழையால், பஞ்சின் தரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நுாற்பாலைகளில், பஞ்சுக்கு நிகரான நுால் உற்பத்தி குறைந்து உள்ளது. நுாற்பாலைகளின் உற்பத்தி செலவு, மூன்று சதவீதம் வரை உயர்ந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|