பதிவு செய்த நாள்
21 பிப்2021
21:32
முதலீட்டு வாய்ப்பாக, ரியல் எஸ்டேட்டிற்கு வரவேற்பு அதிகரித்திருப்பதாகவும், பெரும்பாலானோர், நகருக்கு வெளியே, பெரிய அளவிலான வீடுகளை, நாடத் துவங்கியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்திய தொழிலக கூட்டமைப்பு மற்றும் அனராக் நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில், முதலீடு நோக்கில் ரியல் எஸ்டேட், கொரோனா சூழலுக்கு முன் இருந்த நிலையை தற்போது மீண்டும் பெற்றுள்ளதாக தெரிவிக்கிறது.வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பு காரணமாக, பலரும், பெரிய அளவிலான சொந்த வீட்டை, நாடத் துவங்கியுள்ளது, இதற்கான முக்கிய காரணமாக அமைகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் பலரும், பிராண்ட் மதிப்பு கொண்ட நிறுவனங்கள் கட்டிய வீடுகளை, அதிகம் நாடத் துவங்கியுள்ளனர்.
முதலீடு நோக்கில் பார்க்கும் போது, ரியல் எஸ்டேட் முதலிடத்தில் உள்ளது. பங்குச்சந்தை யின் ஏற்ற இறக்கத்தை மீறி, பங்கு முதலீடு இரண்டாவது இடத்தில் உள்ளது. பொது முடக்கத்தின் போது, தங்க முதலீட்டின் மீதான ஈர்ப்பு, அதிகரித்த நிலையில், அது, தற்போது, சற்று குறைந்துள்ளது.குறைந்த வட்டி விகிதம் காரணமாக, அதிகம் நாடப்படும் முதலீடுகளில், வைப்பு நிதி, கடைசி இடத்தில் உள்ளது. வீட்டுக்கடன் வட்டி விகிதம், சாதகமாக நிலவும் சூழலில், வீடு வாங்க, இது பொருத்தமான நேரம் என, பலரும் கருதுகின்றனர்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|