சரிவில் இருந்து மீளும்  ரியல் எஸ்டேட் துறை சரிவில் இருந்து மீளும் ரியல் எஸ்டேட் துறை ...  தமிழகத்தில் ஆக்சிஜன் ஆலை ‘ஐநாக்ஸ்’ நிறுவனம் அமைக்கிறது தமிழகத்தில் ஆக்சிஜன் ஆலை ‘ஐநாக்ஸ்’ நிறுவனம் அமைக்கிறது ...
ரிலையன்ஸ் – பியூச்சர் ஒப்பந்தம் உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2021
02:47

புதுடில்லி : ரிலையன்ஸ் – பியூச்சர் குழுமத்திற்கு எதிராக, அமேசான் தொடர்ந்த வழக்கில், பியூச்சர் ரீடெய்ல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்ப்பு : முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், கிஷோர் பியானியின், பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை, 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது. இதற்கு, பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில், 4.78 சதவீத பங்குகளை வைத்துள்ள, அமேசான் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அமேசான் தொடர்ந்த வழக்கை விசாரித்த, சிங்கப்பூர் சர்வதேச மத்தியஸ்த மையம், ரிலையன்ஸ் ரீடெய்ல் – பியூச்சர் ரீடெய்ல் ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வர, தடை விதித்தது.

இதை எதிர்த்து, பியூச்சர் குழுமம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, ‘ஒப்பந்த அமலாக்கம் தொடர்பான தடை தொடரும்’ என, இம்மாத துவக்கத்தில் தீர்ப்பளித்தது.

மேல்முறையீடு : இதையடுத்து, பியூச்சர் குழுமம், டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மூல வழக்கின் தீர்ப்பை பொறுத்து, ஒப்பந்தத்தை அமல்படுத்த அனுமதி அளித்தது. இதை எதிர்த்து, அமேசான் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு, நேற்று, உச்ச நீதிமன்ற நீதிபதி, ரோஹின்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், மூல வழக்கு விசாரணை தொடர்வதற்கு அனுமதி அளித்த அமர்வு, இறுதி முடிவு வரும் வரை ஒப்பந்தத்தில் குறுக்கிட மறுத்து விட்டது. மேலும், இது தொடர்பாக, மூன்று வாரங்களில் பதில் அளிக்குமாறு, பியூச்சர் ரீடெய்ல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு,‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)