பதிவு செய்த நாள்
23 பிப்2021
21:09
புதுடில்லி:இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு, தென் அமெரிக்க நாடான, கொலம்பியாவில் மிகப் பிரமாதமான வர்த்தக வாய்ப்புகள் காத்திருப்பதாக, அந்நாட்டிற்கான இந்திய துாதர், சஞ்சீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
‘வீடியோ கான்பரன்ஸ்’ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கழகம், இந்தியா – கொலம்பியா ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி வாய்ப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடத்தியது. இதில், சஞ்சீவ் ரஞ்சன் பேசியதாவது: கொலம்பியாவில், இந்திய ஆயத்த ஆடை ஏற்று மதியாளர்களுக்கு ஏராளமான வர்த்தக வாய்ப்பு காத்திருக்கிறது.
இங்கு, ‘பேஷன்’ ஆடைகள் மட்டும், ஆண்டுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகிறது. கொலம்பியாவின் மொத்த தொழில் உற்பத்தியில், பேஷன் ஆடைகள் துறை, 9.4 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. இத்துறையில், 6 லட்சத்திற்கும் அதிக மானோர் பணியாற்றி வருகின்றனர். கொலம்பியாவின் ஆயத்த ஆடைகள் இறக்குமதியில், இந்தியாவின் பங்கு, 3 சதவீத அளவிற்கே உள்ளது. அதனால் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், கொலம்பியாவில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தேர்வு
இக்கூட்டத்தில் பேசிய, ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கழக தலைவர், ஏ.சக்திவேல், ‘‘இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களையும், கொலம்பிய இறக்குமதியாளர்களையும் இணைக்கும் பாலமாக, கழகம் செயல்படும்,’’ என்றார். இவர், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|