பதிவு செய்த நாள்
23 பிப்2021
21:17
புதுடில்லி:சீனாவில் இருந்து இறக்குமதியாகும், உருக்கு பொருட்களால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படுவது குறித்து, ‘டி.ஜி.டி.ஆர்.,’ எனப்படும், வர்த்தக நிவாரண தலைமை இயக்குனரகம், ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
சீனாவில் இருந்து மலிவு விலையில் இறக்குமதியாகும், இரும்பு குழாய்கள், உருக்குப் பொருட்கள் போன்றவற்றால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, 2017 பிப்ரவரியில், பொருள் குவிப்பு வரி விதிக்கப்பட்டது. இது, வரும், மே 16ம் தேதியுடன் காலாவதியாகிறது. இந்நிலையில், ஐ.எஸ்.எம்.டி., மற்றும் ஜிந்தால் சாவ் நிறுவனங்கள், ‘டி.ஜி.டி.ஆர்.,’யில் புகார் அளித்துள்ளன.
அதில், ‘பொருள் குவிப்பு வரி விதிக்கப்பட்ட போதிலும், சீனாவில் இருந்து மலிவு விலையில், தொடர்ந்து இரும்பு, உருக்கு பொருட்கள் இறக்குமதியாவதால், அது குறித்து விசாரிக்க வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், டி.ஜி.டி.ஆர்., விசாரணையை துவக்கி உள்ளது.
இதில், புகாருக்கு அடிப்படை ஆதாரம் உள்ளது தெரியவந்தால், சீன உருக்கு பொருட்கள் இறக்குமதிக்கு, பொருள் குவிப்பு வரி உயர்த்தப்படும். அத்துடன், வரி காலாவதி காலம் நீட்டிக்கப்படும் என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|