பதிவு செய்த நாள்
24 பிப்2021
21:15
புதுடில்லி:‘மாருதி சுசூகி இந்தியா’ நிறுவனம், அதன், ‘ஸ்விப்ட்’ காரின், மேம்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது.புதிய, ‘ஸ்விப்ட் – 2021’ மாடல் கார் குறித்து, இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷஷாங் ஸ்ரீவாத்ஸவா கூறியதாவது:
அறிமுகம் செய்யப்பட்ட, 2005ம் ஆண்டிலிருந்து, தொடர்ந்து இந்த கார், வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இதுவரை, 24 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கை யாளர்களை கொண்டுள்ளது. இந்த கார், புதிய, சக்தி மிகுந்த, ‘கே சீரிஸ்’ இன்ஜினுடன், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள், இரு வண்ண தோற்றம், ஆகியவற்றுடன் வந்துள்ளது.
விலை, 5.73 – 8.41 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. மைலேஜ், மேனுவலில், 23.2 கி.மீ., ஆட்டோமேட்டிக்கில், 23.76 கி.மீ., கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஹூண்டாய்: ‘ஹூண்டாய்’ நிறுவனம், முதல் முறையாக அறிமுகம் செய்ய இருக்கும், ஏழு இருக்கைகள் கொண்ட, பிரீமியம் எஸ்.யு.வி., காரின் பெயர், ‘ஹூண்டாய் அல்கசர்’ என தெரிவித்துள்ளது.இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது:ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் துவங்கி, 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில், நிறுவன வரலாற்றில், 2021ல், புதிய பிரிவுக்குள் செல்கிறோம். இதன்படி, ஏழு இருக்கைகள் உடைய கார் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர், ‘ஹூண்டாய் அல்கசர்!’ இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|