இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு ...  ‘யுனிகார்ன்’ அந்தஸ்தை பெற்றது ‘இன்ப்ரா டாட் மார்க்கெட்’ ‘யுனிகார்ன்’ அந்தஸ்தை பெற்றது ‘இன்ப்ரா டாட் மார்க்கெட்’ ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
டிஜிட்டல் நாணயங்களால் பாதிப்பு:ரிசர்வ் வங்கி கவர்னர் கவலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2021
21:20

புதுடில்லி:‘மெய்நிகர் நாணயங்கள்’ எனப்படும், ‘டிஜிட்டல் நாணயங்கள்’ நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து, ரிசர்வ் வங்கி கவலை கொண்டிருப்பதாகவும்; அதை மத்திய அரசுக்கு தெரிவித்திருப்பதாகவும், கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கான நேர்காணலில், அவர் இதை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில், அவர் மேலும் கூறியதாவது:டிஜிட்டல் நாணயங்கள் பற்றி, எங்களுக்கு சில முக்கிய கவலைகள் உள்ளன. இது குறித்து, அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளோம். விரைவில் அரசு, இது குறித்து அறிவிக்கும் அல்லது பார்லி.,யின் கருத்தை அறிந்து முடிவு செய்யும் என, கருதுகிறேன்.‘பிளாக்செயின்’ தொழில்நுட்பம் என்பது வேறு என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அந்த தொழில்நுட்பத்தின் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது வேறு விஷயம். ஆனால், அந்த தொழில்நுட்ப பின்னணியில் இயங்கும், டிஜிட்டல் நாணயங்களின் பாதிப்பு கவலை கொள்ள தக்கதாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மேலும், டிஜிட்டல் நாணயத்தை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்வது குறித்த முயற்சிகள், தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், மேலும் விவரிக்கவில்லை என்றாலும், பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்வதற்காகவும், பண மோசடிகளுக்காகவும், டிஜிட்டல் நாணயங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து, கடந்த காலங்களில், ரிசர்வ் வங்கி தன்னுடைய கவலைகளை தெரிவித்து வந்துள்ளது.கடந்த, 2018ல் ரிசர்வ் வங்கி, நாட்டில், டிஜிட்டல் நாணய பரிமாற்றத்துக்கு தடை விதித்தது.ஆனால், டிஜிட்டல் நாணய சந்தைகள் தொடுத்த முறையீட்டை அடுத்து, உச்ச நீதிமன்றம், தடையை ரத்து செய்வதாக அறிவித்தது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)