பதிவு செய்த நாள்
24 பிப்2021
21:27
மும்பை:தேசிய பங்குச் சந்தை, தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக, நேற்று வர்த்தகத்தை, தற்காலிகமாக சில மணி நேரம் நிறுத்தி வைத்தது.
இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டு சந்தைகளிலும் வர்த்தகம், மாலை, 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது.இது குறித்து, தேசிய பங்குச் சந்தையின் அறிவிப்பில், சந்தை, இரு தொலைதொடர்பு நிறுவனங்களின் இணைப்புகளை சார்ந்திருந்த போதிலும்; இரண்டிலும் பழுது ஏற்பட்டதை அடுத்து, பகல், 11.40 மணியிலிருந்து, வர்த்தகம் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
பின், பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, மாலை, 3.45 மணியிலிருந்து வர்த்தகம் துவங்கி, மாலை, 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பங்குகள் வர்த்தகம், மாலை, 5 மணி வரை நீட்டிக்கப்படும் என, மும்பை பங்குச் சந்தையும் அறிவித்தது. தேசிய பங்குச் சந்தையில், பங்குகள் மற்றும் முன்பேர சந்தைகள், 3.45 மணிக்கு, மீண்டும் செயல்பட துவங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இதற்கு முன், தேசிய பங்குச் சந்தை, கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலும், இதுபோன்றதொரு தொழில்நுட்ப பிரச்னையை, வர்த்தகத்தின் கடைசி நேரத்தில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|