பதிவு செய்த நாள்
25 பிப்2021
21:25
புதுடில்லி:நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு முன், அந்நிறுவனம் குறித்த தகவல்களை சோதித்துக் கொள்ளுமாறு, முதலீட்டாளர்களை, மத்திய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாத நிறுவனங்களில் முதலீடு செய்வதை மக்கள் தவிர்க்கும் வகையில், இத்தகைய அறிவிப்பை, மத்திய நிறுவனங்கள் விவகார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து அமைச்சகத்தின் அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: முதலீட்டாளர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு முன், அந்நிறுவனம் குறித்த விபரங்களை அறிந்து கொள்வது அவசியம்.
நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் என்பவை, வங்கி சாரா நிதி நிறுவனங்களாகும். அவை, அவற்றின் உறுப்பினர்களுக்கு கடன் வழங்குகிறது அல்லது அவர்களிடமிருந்து பெறுகிறது.எனவே, அவற்றின் பதிவு உள்ளிட்ட விபரங்களை அறிந்து, அதன் பின்னரே, முதலீட்டாளர்கள் முடிவுகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|