ஆசியாவின் முதல் பணக்காரர்  மீண்டும் முகேஷ் அம்பானி ஆசியாவின் முதல் பணக்காரர் மீண்டும் முகேஷ் அம்பானி ... பிரீமியம் மின்விசிறி பிரிவை விரிவுபடுத்த ஓரியண்ட்டின்  ஐ-ப்ளோட் இன்வெர்ட்டர் மின்விசிறிகள் பிரீமியம் மின்விசிறி பிரிவை விரிவுபடுத்த ஓரியண்ட்டின் ஐ-ப்ளோட் ... ...
மூன்றாவது காலாண்டில் ஜி.டி.பி., 0.4 சதவீதமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2021
20:41

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், தொடர்ந்து இரு காலாண்டுகளாக, நாட்டின், ‘ஜி.டி.பி.,’ எனும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீழ்ச்சியை கண்டு வந்த நிலையில், மூன்றாவது காலாண்டில், சற்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 0.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வளர்ச்சி, மைனஸ், 24.4 சதவீதமாக சரிவைக் கண்டது. இதன் தொடர்ச்சியான பாதிப்பால், இரண்டாவது காலாண்டில், வளர்ச்சி, மைனஸ், 7.3 சதவீதமாக வீழ்ச்சி கண்டது.

இந்நிலையில், தடைகள் நீக்கப்பட்டதை அடுத்து, பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்க துவங்கின. இதன் காரணமாக, மூன்றாவது காலாண்டில், வளர்ச்சி துவங்கி உள்ளது.மத்திய புள்ளியியல் அலுவலகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இவ்வலுவலகம், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி, மைனஸ் 8 சதவீதமாக இருக்கும் என கணித்து, ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய துறைகள்: நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த ஜனவரி மாதத்தில், 0.1 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரியில், உரம், உருக்கு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் வளர்ச்சி காணப்பட்டுள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகிய துறைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)