பதிவு செய்த நாள்
02 மார்2021
20:57
புதுடில்லி:கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 0.25 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து, மத்திய வர்த்தகதுறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் ஏற்றுமதி, கடந்த பிப்ரவரியில், 0.25 சதவீதம் சரிவடைந்து, 2.02 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.அதேசமயம், இந்த மாதத்தில், இறக்குமதி, 6.98 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு, 2.96 லட்சம் கோடி ரூபாய். இதனையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 94 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில், எண்ணெய் புண்ணாக்கு, இரும்பு தாது, இறைச்சி, அரிசி, மசாலா பொருட்கள், மருந்து, ரசாயனம் ஆகிய பொருட்களின் ஏற்றுமதிஅதிகரித்துள்ளது.அதேசமயம், பெட்ரோலிய பொருட்கள், தோல், முந்திரி, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள், தேயிலை, காபி ஆகிய பொருட்களின் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|