பதிவு செய்த நாள்
03 மார்2021
23:00
புதுடில்லி:‘ஆன்லைன்’ பயண சேவை நிறுவனமான, ‘ஈஸி டிரிப் பிளானர்ஸ்’, வரும், 8ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. இந்நிலையில், ஒரு பங்கின் விலை, 186 – 187 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 510 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டு உள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது, புதிய பங்குகளை விற்பனை செய்யாமல், நிறுவனர்கள் வசம் இருக்கும் பங்குகள் மட்டுமே, விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
இதன் நிறுவனர்களான, நிஷாந்த் பிட்டி, ரிகாந்த் பிட்டி ஆகிய இருவரும், தலா, 255 கோடி ரூபாய்க்கு, தங்கள் வசம் இருக்கும் பங்குகளை, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஈஸி டிரிப் பிளானர்ஸ் நிறுவனம், ‘ஈஸிமைடிரிப் டாட் காம்’ எனும் இணையதளம் மூலம், சேவைகளை வழங்கி வருகிறது.
பங்கு வெளியீடு, வரும், 8ம் தேதியன்று துவங்கி,10ம் தேதியன்று முடிவடைய இருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. துணிகர முதலீட்டாளர்களுக்கான பங்கு வெளியீடு, நாளை துவங்க இருக்கிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|