வீட்டுக் கடன் வட்டி ஐ.சி.ஐ.சி.ஐ., குறைத்தது வீட்டுக் கடன் வட்டி ஐ.சி.ஐ.சி.ஐ., குறைத்தது ...  தனிநபர் கடன் வாங்குவதில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு தனிநபர் கடன் வாங்குவதில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ...
‘மேல்முறையீடு செய்வது என் கடமை’ ‘கெய்ர்ன்’ விவகாரத்தில் நிதியமைச்சர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2021
20:57

புதுடில்லி:‘கெய்ர்ன்’ நிறுவன விவகாரத்தையொட்டி, வரி விஷயங்களில் மேல்முறையீட்டுக்கு செல்வது என்பது, தன்னுடைய கடமை என, மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனை சேர்ந்த, கெய்ர்ன் நிறுவனம், வரி சம்பந்தமாக, இந்தியாவுக்கு எதிராக தொடுத்த வழக்கில், சர்வதேச தீர்ப்பாயம், அதற்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது.மேலும், இந்திய அரசு, கெய்ர்ன் நிறுவனத்துக்கு,10 ஆயிரத்து, 247 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

மேல்முறையீடு

இந்த தீர்ப்பை மதித்து, இழப்பீட்டு தொகையை தரவில்லை என்றால், இந்தியாவின் சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என, கெய்ர்ன் நிறுவனம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், இந்திய அரசு, இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் என, குறிப்பால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:வரி விவகாரத்தில் நாங்கள் எங்கள் நிலையில் தெளிவாக இருக்கிறோம். 2014ம் ஆண்டிலிருந்து இன்றுவரை, அதை திரும்ப திரும்ப சொல்லி வருகிறோம். இதில் எந்த குழப்பமும் கிடையாது.வரி விதிப்பது குறித்த இந்தியாவின் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டால், நான் முறையீடு செய்வேன். அது என் கடமை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூன்று முறை

கெய்ர்ன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைமன் தாம்சன் மற்றும் உயர் அதிகாரிகள், அண்மையில் நிதியமைச்சக அதிகாரிகளை, மூன்று முறை சந்தித்த பின், நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, இந்தியா, மேல்முறையீட்டுக்கு செல்லும் என கருதப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)