பதிவு செய்த நாள்
05 மார்2021
21:16
புதுடில்லி:தனியார் வங்கியான, ‘கோட்டக் மகிந்திரா வங்கி’ இந்திய ராணுவத்தினரின் சம்பள கணக்கை பராமரிக்க இருப்பதாகவும், இதற்காக, இந்திய ராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கோட்டக் மகிந்திரா வங்கியில், ராணுவ வீரர்கள் கணக்கு துவங்குவதை அடுத்து, அவர்கள் அனைவரும், வங்கியின் சேவைகள் மற்றும் தயாரிப்புகளை பெறலாம்.
பூஜ்ஜிய இருப்பு வசதி கொண்ட இந்த சம்பளக் கணக்கில், ஆண்டுக்கு, 4 சதவீத வட்டியையும் பெறலாம். தனிநபர் விபத்துக் காப்பீடு வசதியும் தரப்படும்.இந்தியா முழுவதிலும் உள்ள வங்கியின், 1,603 கிளைகள், 2,573 ஏ.டி.எம்.,களை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சம்பள கணக்கு, ராணுவ வீரர்களின் தேவைகளை கணக்கில் கொண்டு, அதற்கேற்ப வடிவமைக்கப் பட்டதாகும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|