பதிவு செய்த நாள்
05 மார்2021
21:17
புதுடில்லி:கொரோனா காலத்தில், முன்பை விட அதிகமான பெண்கள், தனிநபர் கடன்களை வாங்கியிருப்பதாக, கடன் தகவல் நிறுவனமான, ‘சி.ஆர்.ஐ.எப்., ஹை மார்க்’கின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆய்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
வீட்டுக்கடன், வாகன கடன் ஆகியவற்றை விட, பிணைகள் ஏதுமின்றி வழங்கப்படும் தனிநபர் கடன்களை, அதிகமான பெண்கள் வாங்கி இருக்கிறார்கள்.கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், தனிநபர் கடன்களை வாங்கும் பெண்களின் எண்ணிக்கை, 23 சதவீதம் அதிகரித்துஉள்ளது.
மற்ற கடன்களில் பெண்கள் வாங்கிய சராசரி கடன் தொகை, ஆண்கள் வாங்கியதை விட குறைவாக இருந்தாலும்; வாகன கடனை பொறுத்தவரை, அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.இதர மாநிலங்களை விட, தென் மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் கடன் பெற்றுள்ளனர்.தனியார் வங்கிகளை விட, பொதுத்துறை வங்கிகளே அதிகம் கடன் கொடுத்துள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|