பதிவு செய்த நாள்
06 மார்2021
20:32
புதுடில்லி:ஏப்ரல், முதல் தேதிக்கு பிறகு, விற்பனை செய்யப்படும் கார்களில், முன்பக்கத்தில் பயணம் செய்வோரின் பாதுகாப்புக்காக, இரண்டு, ‘ஏர்பேக்’குகள் கட்டாயம் பொருத்தப் பட்டிருக்க வேண்டும் என, அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கார் களின் விலை அதிகரிக்க கூடும் என்கிறார்கள், வாகனத்துறையை சேர்ந்தவர்கள்.இதுவரை, காரில், ஓட்டுனருக்கு, ஏர்பேக் கட்டாயம் இருக்க வேண்டும் என்றே இருந்தது. இதனால், பல முன்னணி நிறுவனங்கள், தங்களின் குறைந்த விலை கார்களில், ஓட்டுனருக்கு மட்டும், ஏர்பேக் வசதியை வழங்கி வந்தனர். அருகில் இருக்கும் பயணிக்கும் தேவை எனில், தனியாக கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற, நிலையே இருந்தது.
ஆனால், ஒரே காரில் பயணிக்கும் இருவருக்கு, இரு வேறு விதமான பாதுகாப்புகள் என்பது, சரியாக இருக்காது என்ற, கருத்து எழுந்ததும், அரசு உடனடியாக, முன்பக்கம் இருக்கும், இருவருக்கும் ஏர்பேக் கட்டாயம் என, அறிவித்துள்ளது.இதனையடுத்து, ஏப்ரல், முதல் தேதியிலிருந்து விற்பனை ஆகும் கார்களில், இரண்டு ஏர்பேக் இருக்கவேண்டும் என்றும்; தற்போது இருக்கும் மாடல்களில், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலை கார்களில், ஒரு ஏர் பேக் பொருத்த வேண்டும் என்றால், 5 ஆயிரம் ரூபாயிலிருந்து, 9 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்கிறார்கள்.இதனால், கார்களின் விலை, மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|