நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சி  ‘ரூட்’டை மாற்றி யோசிக்கும் மத்திய அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சி ‘ரூட்’டை மாற்றி யோசிக்கும் ... ...  அதிகரித்து வரும் எரிபொருள் தேவை அதிகரித்து வரும் எரிபொருள் தேவை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கார்களில் ‘ஏர்பேக்’ கட்டாயம் விலை அதிகரிக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2021
20:32

புதுடில்லி:ஏப்ரல், முதல் தேதிக்கு பிறகு, விற்பனை செய்யப்படும் கார்களில், முன்பக்கத்தில் பயணம் செய்வோரின் பாதுகாப்புக்காக, இரண்டு, ‘ஏர்பேக்’குகள் கட்டாயம் பொருத்தப் பட்டிருக்க வேண்டும் என, அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கார் களின் விலை அதிகரிக்க கூடும் என்கிறார்கள், வாகனத்துறையை சேர்ந்தவர்கள்.இதுவரை, காரில், ஓட்டுனருக்கு, ஏர்பேக் கட்டாயம் இருக்க வேண்டும் என்றே இருந்தது. இதனால், பல முன்னணி நிறுவனங்கள், தங்களின் குறைந்த விலை கார்களில், ஓட்டுனருக்கு மட்டும், ஏர்பேக் வசதியை வழங்கி வந்தனர். அருகில் இருக்கும் பயணிக்கும் தேவை எனில், தனியாக கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற, நிலையே இருந்தது.

ஆனால், ஒரே காரில் பயணிக்கும் இருவருக்கு, இரு வேறு விதமான பாதுகாப்புகள் என்பது, சரியாக இருக்காது என்ற, கருத்து எழுந்ததும், அரசு உடனடியாக, முன்பக்கம் இருக்கும், இருவருக்கும் ஏர்பேக் கட்டாயம் என, அறிவித்துள்ளது.இதனையடுத்து, ஏப்ரல், முதல் தேதியிலிருந்து விற்பனை ஆகும் கார்களில், இரண்டு ஏர்பேக் இருக்கவேண்டும் என்றும்; தற்போது இருக்கும் மாடல்களில், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலை கார்களில், ஒரு ஏர் பேக் பொருத்த வேண்டும் என்றால், 5 ஆயிரம் ரூபாயிலிருந்து, 9 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்கிறார்கள்.இதனால், கார்களின் விலை, மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)