‘பறக்கும் டாக்ஸி’க்காக நிதி திரட்டும்   ‘இ – பிளேன்’ ‘பறக்கும் டாக்ஸி’க்காக நிதி திரட்டும் ‘இ – பிளேன்’ ...  காப்பீடு வசதியை நாடும் பெண்கள் காப்பீடு வசதியை நாடும் பெண்கள் ...
வீட்டுக்கடன் பெறுவதற்கு முன் தீர்மானிக்க வேண்டிய அம்சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2021
20:48

வட்டி விகித போக்கு சாதகமாக இருந்தாலும், வீட்டுக்கடனுக்கான வாய்ப்பை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.வங்கிகள் போட்டி போட்டு, வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன. கடந்த, 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது.


10க்கும் மேற்பட்ட வங்கிகள், 7 சதவீதத்திற்கும் குறைவான வட்டி விகிதத்தில் இருந்து துவங்கும் கடன் வசதியை அளிக்கின்றன.போட்டி காரணமாக, மேலும் பல வங்கிகள் சாதகமான வட்டி விகிதத்தை அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாத காலத்திற்கு பின், வீட்டுக்கடன் வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்ட நிலையில், வங்கிகள் தற்போது இந்த பிரிவில் அதிக கவனம் செலுத்துகின்றன.

இடர் குறைவு


வர்த்தக கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களோடு ஒப்பிடும் போது வீட்டுக்கடன் இடர் குறைந்தது என்பதால், வங்கிகள் வீட்டுக்கடன் வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன. இதன் காரணமாக, வாடிக்கையாளர்களை கவர குறைந்த வட்டி விகிதம் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன.எனவே, சொந்த வீடு வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் வீட்டுக்கடன் வசதியை நாட, இது பொருத்தமான காலமாக அமைகிறது. குறைந்த மாதத் தவணையில் கடன் பெறலாம் என்றாலும், வீட்டுக்கடன் பெறுபவர்கள் மனதில் கொள்ள வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன.


வீட்டுக்கடன் என்பது நீண்ட கால பொறுப்பு என்பதால், முதலில் சீரான வருமானம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வங்கிகள், வருமானம் உள்ளிட்ட தகுதியை கணக்கில் கொள்கின்றன என்றாலும், கடன் பெறுபவரின் எதிர்கால நிதி தேவைகள் போன்ற அம்சங்களை, அவை கருத்தில் கொள்வதில்லை.

எனவே, தற்போதைய வருமானம், எதிர்கால இலக்குகள் ஆகியவற்றை பரிசீலித்து, மாதத் தவணையை சிக்கல் இல்லாமல் செலுத்த முடியுமா என, பார்க்க வேண்டும். அதே போல, வீட்டுக்கு செலுத்த வேண்டிய முன் பணத்திற்கான தொகை கைவசம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.


மற்ற கடன்கள்


வங்கிகள் குறைந்த வட்டி விகிதம் அளிக்கின்றன என்றாலும், இதற்கான நிபந்தனைகள் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிக வருமானம் மற்றும் ‘கிரெடிட் ஸ்கோர்’ அதிகம் இருப்பவர்களுக்கு குறைந்த வட்டி விகிதம் அளிக்கப்படும்.


எனவே, ‘கிரெடிட் ஸ்கோர்’ வலுவாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் இணைந்து கூட்டாக கடன் பெறுவதும் சாதகமாக இருக்கும். பல வங்கிகள் பெண்களுக்கு குறைந்த வட்டி விகிதம் அளிப்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.வாங்க இருக்கும் வீட்டிற்கான பட்ஜெட்டும் முக்கியம். இந்த தொகை, மாதாந்திர பட்ஜெட்டை பாதிக்காமல் இருக்க வேண்டும். இல்லை எனில், மாதத்தவணை சுமையாக மாறிவிடலாம். அதே போல, ஏற்கனவே உள்ள கடன்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.


மொத்த கடன் சுமை வருமானத்தில், 40 சதவீதத்திற்கு மிகாமல் இருப்பது நல்லது. மிக குறைந்த வட்டி விகிதம் காரணமாக மட்டுமே வீட்டுக்கடன் பெற தீர்மானிக்க கூடாது.வட்டி விகிதம் மாறக்கூடியது என்பதால், எதிர்காலத்தில் வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்படலாம். இதனால், உயரும் மாதத் தவணையை சமாளிக்கும் திறனும் இருக்க வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)