பதிவு செய்த நாள்
07 மார்2021
20:55
கொரோனா பாதிப்பை அடுத்து, பெண்கள் மத்தியில் மருத்துவ காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும், கடந்த ஓராண்டில் பல பெண்கள் காப்பீடு பாலிசி பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.தனியார் காப்பீடு நிறுவனமான ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், ‘ஆன்லைன்’ மூலம், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் உள்ள பெண்கள் மத்தியில் ஆய்வு நடத்தியது.
குடும்பத்தின் நிதி பாதுகாப்புக்கு அடுத்தபடியாக, மருத்துவ அவசரநிலை பாதுகாப்பை பெண்கள் முக்கியமாக கருதுவதாக, இந்த ஆய்வு தெரிவிக்கிறது.ஆய்வில் பங்கேற்ற பெண்களில் பெரும்பாலானோர், பெண்களை மையமாக கொண்ட மருத்துவ காப்பீடு பாலிசிகள் தேவை என கூறியுள்ளனர். மருத்துவ காப்பீடு தொடர்பான முடிவு எடுப்பதில், 40 சதவீதத்திற்கும் அதிகமாக பெண்கள் பங்கேற்றுள்ளனர். பத்தில் ஆறு பெண்கள் தனி பாலிசி பெற்றுள்ளனர்.
பெண்கள் மத்தியில் மருத்துவ காப்பீடு பெறுவது அதிகரித்திருக்கிறது. பெரும்பாலான பெண்கள், கடந்த ஓராண்டில் காப்பீடு பாலிசி பெற்றுள்ளனர். வலைப்பின்னலில் உள்ள மருத்துவமனைகள், ‘கிளைம்’கள் நிறைவேற்றம் உள்ளிட்ட அம்சங்கள், காப்பீடு நிறுவன தேர்வில் முக்கியமாக அமைகின்றன எனும் விபரமும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|