பதிவு செய்த நாள்
09 மார்2021
03:14
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் கால்பதிப்பதற்காக, நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.
இந்நிறுவனம் தற்போது, மும்பை, புதுடில்லி, அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில், சேவைகளை வழங்கி வருகிறது.அடுத்த கட்டமாக சென்னை, புனே ஆகிய இடங்களுக்கும் சேவையை விரிவுபடுத்துவதற்காக, 5 கோடி ரூபாய் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.இந்நிறுவனம், கடந்த, 2015ம் ஆண்டில் துவங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், வீல்சேர் டாக்ஸி சேவை வழங்கி வருகிறது. இந்த டாக்ஸி, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில், ‘ஹைட்ராலிக் லிப்ட், வீல்சேர்’ போன்ற வசதிகள் கொண்டதாக இருக்கும்.
இந்நிறுவனம் அண்மையில், ‘சுகம்ய பாரத்’ எனும் மொபைல் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம், பொது இடங்கள் மற்றும் கட்டடங்கள் மாற்றுத் திறனாளிகள் அணுகுவதற்கான வாய்ப்பு, வசதிகள் கொண்டிருக்கின்றனவா என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|