பதிவு செய்த நாள்
09 மார்2021
21:43
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகள், கடந்த, 2020ம் ஆண்டில் அதிகரித்துஇருப்பதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
'ஹவுஸிங் டாட் காம்' நிறுவனம், இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையின் எதிர்காலம் குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த, 2020ம் ஆண்டில், ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட, தொழில்நுட்ப 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களில், 4,022 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில், ரியல் எஸ்டேட் துறையில் கடந்த, 2000மாவது ஆண்டு வாக்கில் தான், தொழில் நுட்ப அடிப்படையிலான, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் காலடி எடுத்து வைத்தன. அதன் பிறகு, இத்தனை ஆண்டுகளில் இல்லாத வகையில், அதிகபட்ச முதலீடு கடந்த, 2020ம் ஆண்டில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனாவை முன்னிட்டு பல நிறுவனங்கள், 'ஆன்லைன்' முறையிலான விற்பனைக்கும் வந்ததை அடுத்து, இந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.சொத்துக்கள் வாங்குவதற்கான, பண பரிமாற்றங்கள் உள்ளிட்டவை நேரடியாக நடைபெற்றாலும், அவற்றை வாங்கும் முடிவுக்கு, 'ஆன்லைன்' தேடல்கள் மூலமாகவே, 50 சதவீதம் பேர் வருகிறார்கள்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|