பதிவு செய்த நாள்
09 மார்2021
21:55
புதுடில்லி:கடந்த பிப்ரவரியில், பயணியர் வாகன விற்பனை, 10 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும்; அதேசமயம், இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனை, சரிவைக் கண்டிருப்பதாகவும், வாகன முகவர்கள் கூட்டமைப்பான, ‘எப்.ஏ.டி.ஏ.,’ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:பயணியர் வாகனங்களைப் போலவே, டிராக்டர்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.ஒட்டுமொத்த வாகன விற்பனையை பொறுத்தவரை, கடந்த பிப்ரவரியில், 13.43 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு பிப்ரவரியில், புதிய மாசு உமிழ்வு விதிமுறை போன்ற பல்வேறு காரணங்களால், பயணியர் வாகன விற்பனை குறைந்திருந்தது.
அதனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் விற்பனை, இரண்டு இலக்கம் அளவுக்கு அதிகரித்து ள்ளது.இரு சக்கரவாகனங்களை பொறுத்தவரை, விற்பனை சரிவுக்கு, கொரோனா பாதிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், எரிபொருள் விலை அதிகரித்ததாலும், இருசக்கர வாகன விற்பனை சரிவைக் கண்டது.
000000000000000000000000222222222222222222222222222222222222222222222.............................................33எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், இருசக்கர, மூன்று சக்கர மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனை பாதிக்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|