‘தரமற்ற கடன்களை கொடுக்காதீர்கள்’ தலைமை பொருளாதார ஆலோசகர் ‘தரமற்ற கடன்களை கொடுக்காதீர்கள்’ தலைமை பொருளாதார ஆலோசகர் ...   ‘பிட்காயின்’ஐ விஞ்சிய  ‘ஆர்கிட் பார்மா’ வளர்ச்சி ‘பிட்காயின்’ஐ விஞ்சிய ‘ஆர்கிட் பார்மா’ வளர்ச்சி ...
பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் 'லிஸ்ட் ரெடி' என்கிறது கெய்ர்ன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2021
22:25

புதுடில்லி:இந்திய அரசு, பணத்தை திருப்பி தராதபட்சத்தில், பறிமுதல் செய்வதற்கான இந்தியாவின் சொத்துக்கள் எவை எவை என்பதை கண்டறிந்துள்ளதாக, பிரிட்டனை சேர்ந்த, 'கெய்ர்ன் எனர்ஜி' நிறுவனம் தெரிவித்துள்ளது.

நம்பிக்கை

மேலும், இந்திய அரசு திருப்பி கொடுக்க வேண்டிய தொகை, வட்டி உள்ளிட்டவற்றுடன் சேர்த்து, 12 ஆயிரத்து 410 கோடியாகும் என்றும் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, 2020ம் ஆண்டிற்கான, வருவாய் குறித்த ஆண்டறிக்கையில், இந்திய அரசுடனான, சமரச பேச்சு வார்த்தைகளால் தீர்வு காணப்படுவதன் மூலமாகவோ, அல்லது, இந்திய அரசின் சொத்துக்களை பறிமுதல் செய்வதன் மூலமாகவோ, தொகையை திரும்ப பெற்றுவிடுவதில் நிறுவனம் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவும், கெய்ர்ன் தெரிவித்துள்ளது.சர்வதேச தீர்ப்பாயம்வரி குறித்த விவகாரத்தில், இந்திய அரசு, கெய்ர்ன் நிறுவனத்துக்கு, 10 ஆயிரத்து, 247 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று, சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையே, கெய்ர்ன் நிறுவனம் மேலும், 9 நாடுகளின் நீதிமன்றங்களிலும் முறையிட்டிருந்தது. அவற்றில், 5 நாடுகளின் நீதிமன்றங்கள், கெய்ர்ன் நிறுவனத்துக்கு சாதகமான சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்று, உறுதி செய்துள்ளன.இந்நிலையில், இதுவரையிலான வட்டித் தொகையையும் சேர்த்து மொத்தம், 1.7 பில்லியன் டாலர், அதாவது, கிட்டத்தட்ட, 12 ஆயிரத்து, 410 கோடி ரூபாயை, இந்திய அரசு தர வேண்டும் என, கெய்ர்ன் தெரிவித்து உள்ளது. இந்திய அரசு, மேல்முறையீடு செய்ய உள்ளதா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)