பதிவு செய்த நாள்
10 மார்2021
22:12
புதுடில்லி:மத்திய அரசின், அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 2.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கான ஒப்புதலை, இதுவரை வங்கிகள் வழங்கி உள்ளதாக, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, 100 சதவீத, அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக, 3 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி அறிவித்திருந்தது. கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட, பொருளாதார மந்த நிலை பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உதவும் வகையில், இந்த நிதி தொகுப்பை, மத்திய நிதியமைச்சகம் அறிவித்து இருந்தது.
தற்போது, இந்த திட்டத்தின் கீழ், கடந்த பிப்ரவரி 28ம் தேதி வரையிலான காலத்தில், 2.46 லட்சம் கோடி ரூபாய் அளவிலான, கடன்களுக்கான ஒப்புதல், வங்கிகளால் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இதுவரை மொத்தம், 92.27 லட்சம் பேருக்கு, கடன் வழங்கப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|