சிறு நிறுவனங்களுக்கு  ரூ.2.46 லட்சம் கோடி  சிறு நிறுவனங்களுக்கு ரூ.2.46 லட்சம் கோடி ...  நாட்டிலேயே சென்னையில் தான்  கட்டுமான செலவு குறைவு நாட்டிலேயே சென்னையில் தான் கட்டுமான செலவு குறைவு ...
தமிழகத்தில் மின் வாகன உற்பத்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2021
22:35

சென்னை:மிழகத்தில், மின் வாகனம் மற்றும் அவற்றுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தியை துவங்க, இதுவரை, 13 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு, 13 ஆயிரத்து, 337 கோடி ரூபாய்.

பட்டியல்

இது குறித்து தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், மின் வாகனம் மற்றும் அவற்றுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தியை துவங்க, இதுவரை, 13 நிறுவனங்கள் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த நிறுவனங்களின் பட்டியல், தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இதில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஏத்தர் எனர்ஜி நிறுவனம், மின் ‘ஸ்கூட்டர்’ மற்றும் ‘பேட்டரி பேக்கேஜ்’ உற்பத்திக்காக, 635 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.

இதன் வாயிலாக, 4,321 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஓசூரில், இதன் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஏற்கனவே உற்பத்தி துவங்கிவிட்டது.இதே போல, ‘எலஸ்ட் நிறுவனம், மொபைல், பேட்டரி, இ – பஸ், இ – டிரக்’ என, முழுதும் ஒருங்கிணைந்த திட்ட மாக செயல்படுத்த, 7, 948 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.இதன் வாயிலாக, 8,081 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

வேலைவாய்ப்பு

மின் வாகன ஸ்கூட்டர் உற்பத்திக்காக, 2,354 கோடி ரூபாய் முதலீடு செய்ய, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் வாயிலாக, 2,182 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதே போல, மொத்தம், 13 நிறுவனங்கள் செய்யும் முதலீடு வாயிலாக, 25 ஆயிரத்து, 254 பேருக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)